திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரிக்குள் புகுந்து கத்தியால் வெட்டிய நபர் - பரபரப்பு

Holycross College

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரிக்குள் புகுந்து கத்தியால் வெட்டிய நபர் - பரபரப்பு

திருச்சி கிராப்பட்டியை அருணாசலம் நகரை  சேர்ந்த கிளாட்சன் (32) என்பவர் கடந்த மூன்று மாதங்களாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  ஹோலி கிராஸ் இன்ஸ்டியூசனுக்கு சொந்தமான நியூ டான் டீ அடிக்ஷன் சென்டரில் கவுன்சிலிங் கொடுப்பவராகவும் மற்றும் ஓட்டுநராக இருந்துள்ளார்.

அங்கு மேற்பார்வையாளராக உள்ள ஜெயராணி என்பவருக்கும் இவருக்கும் கடந்த இரண்டு மாதங்களாக மனஸ்தாபம் இருந்து வந்ததில் ஜெயராணி  கடந்த 19.09.24 அன்று  வேலையை விட்டு நீக்கிவிட்டாராம். அதனால் மூன்று நாட்களுக்கு மேலாக தான் வேலை பார்க்கும் இடத்திற்கு  வெளியே கிளாட்சன் நின்று உள்ளார்.

அதன் பிறகு நீதி கேட்டு நேற்று (27.09.2024) கோட்டை காவல் சரகத்தில் உள்ள ஹோலி கிராஸ் இன்ஸ்டிடியூஷனுக்கு காலை வந்துள்ளார். வரும்போது பெயிண்ட் தின்னர் ஒன்றும், ஐந்து ரூபாய் பிளக்ஸ் வெட்டும் கத்தியும், லைட்டர் ஒன்றும் எடுத்து வந்துள்ளார். இதை கையில் வைத்துக்கொண்டு அங்கு உள்ள லைப்ரரி வளாகத்தில் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் வேலையில் சேர்க்க வேண்டும். ஜெயராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு உள்ள பணியாளர்கள் இவரை வந்து தடுக்கும் பொழுது கை தவறுதலாக தின்னர் டேபிள் மீது பட்டு தீப்பற்றி உள்ளது.

அப்பொழுது அதை தடுக்க அங்கு வந்த உதவி பேராசிரியர் கார்த்திக் இவரை பிடித்து தடுக்கும் பொழுது கிளாட்ஷன் கையில் வைத்திருந்த சிறிய கத்தி கார்த்தியின் வலது கை விரலில் வெட்டி உள்ளது. இதில் ஏற்பட்ட காயத்திற்கு அவர் சிங்கார தோப்பில் உள்ள GVN தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து கிளாட்ஷனை விசாரணை செய்து பின்னர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய... 

https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision