கூலி தொழிலாளியிடம் வழிப்பறி செய்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கூலி தொழிலாளியிடம் வழிப்பறி செய்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கடந்த (28.05.2024)-ந் தேதி ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஒயர்லெஸ் ரோடு, அந்தோனியார் சர்ச் அருகில் நடந்து சென்ற விமான நிலைய ஒப்பந்த தொழிலாளியிடம் கத்தியை காண்பித்து மிரட்டி பணத்தை வழிப்பறி செய்ததாக கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், ஏர்போர்ட் கலைவாணர் தெருவை சேர்ந்த ரவுடி பிரேம் (எ) பிரேம்குமார் (25), த.பெ.ரவி என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில், ரவுடி பிரேம் (எ) பிரேம்குமார் என்பவர் மீது ஏர்போர்ட் காவல் நிலையத்தில் கத்தியை காண்பித்து மிரட்டி வழிப்பறி செய்ததாக 3 வழக்குகள், பூட்டிய வீட்டில் திருடியதாக 2 வழக்குகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாக 3 வழக்குகள் உட்பட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே ரவுடி பிரேம் (எ) பிரேம்குமார் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு

ஏர்போர்ட் காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரில் ஆயுதங்களை காண்பித்து வழிப்பறி செய்யும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision