திருச்சி அருகே அரசு பேருந்திலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி

திருச்சி அருகே அரசு பேருந்திலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வானதிரையான் பாளையம் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரின் மகள் பிபிக்க்ஷா (13), புதூர் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் நேற்று பள்ளிக்குச் செல்ல தின்னக்குளம் விரகாலூர் கிராமத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் வானதிரையான் பாளையம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறினார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து மாணவியின் காலில் பேருந்து ஏறியதில் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த பள்ளி மாணவி பிரதிக்ஷா திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லபட்டார். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்த கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பேருந்து ஓட்டுனர் தங்கதுரை (50), நடத்துனர் (35) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision