மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்.

மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (01.07.2024) முதல் (15.07.2024) வரை நடைபெறவுள்ள நேரடி சேர்க்கையில் சேர இத்தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : (15.07.2024) 

சிறப்பு அம்சங்கள் : 

1) பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய Internship training வழங்கப்படும். 

 2) பிரபல தொழில் நிறுவனங்களிலிருந்து வளாக நேர்முக தேர்வு (Campus Interview) நடைபெற்று வேலையில் அமர்த்தப்படுவர். 

சலுகைகள் :

(1) பயிற்சிக் கட்டணம் இல்லை 

(2) கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750/- 

(3) கட்டணமில்லா பேருந்து சலுகை

(4) விலையில்லா மிதிவண்டி 

(5) விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள் 

(6) விலையில்லா சீருடைகள் 2 செட் (7) விலையில்லா காலணி ஒரு செட் (8) பெண் பயிற்சியாளர்களுக்கு கட்டணமில்லா உணவுடன் கூடிய விடுதி வசதி

(9) புதுமைபெண் திட்டத்தில் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படும்.

இது தொடர்பாக முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) புள்ளம்பாடி அவர்களை 9443997026 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அறிந்து பயனடையுமாறு திருச்சிராப்பள்ளி ம.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision