அருவாளை காட்டி மிரட்டி பணத்தை பறித்த இரண்டு சரித்திரபதிவேடு ரவுடிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

அருவாளை காட்டி மிரட்டி பணத்தை பறித்த இரண்டு சரித்திரபதிவேடு ரவுடிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கடந்த (03.06.24)-ந் தேதி, காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வாஸ்நகர் 2வது தெரு பழைய பால்பண்ணை சர்வீஸ்ரோடு சந்திப்பில் இரவு 19:45மணியளவில், லாரி புக்கிங் ஆபீஸில் வேலை பார்க்கும் பணியாளர் நடந்து சென்றபோது, இரண்டு நபர்கள் அருவாளை கழுத்தில் வைத்து மிரட்டி, ரூ.5000/- பணத்தை பறித்து சென்றதாக புகார் பெறப்பட்டது.

இந்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில், வரகனேரி பகுதியை சேர்ந்த பாபு (எ) மிட்டாய் பாபு (30) த.பெ.முகமது உசேன் மற்றும் காமராஜ்நகரை சேர்ந்த தேவா (30) த.பெ.கணேசன் ஆகியோர்கள் இக்குற்ற செயலில் ஈடுப்பட்டது விசாரணையில் தெரியவந்து, எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் விசாரணையில், ரவுடி பாபு (எ) மிட்டாய் பாபு என்பவர் மீது காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லையில் 1 கொலை வழக்கு, 1 கொலை முயற்சி வழக்கு, 2 கஞ்சா வழக்குகளும், ஏர்போர்ட் காவல் நிலையத்தில் 1 வழிப்பறி வழக்கு, 1 திருட்டு வழக்கும், பாலக்கரை காவல் நிலையத்தில் 1 கொலை முயற்சி வழக்கும், கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 1 வழிப்பறி வழக்கும், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா 1 வழக்கு என மொத்தம் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் மற்றொரு ரவுடி தேவா என்பவர் மீது காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லையில் கஞ்சா விற்பனை செய்ததாக 5 வழக்குகளும், 5 அடிதடி வழக்குகளும், 2 வழிப்பறி வழக்கும், மதுவிலக்கு பிரிவில் 1 கஞ்சா வழக்கும், கோட்டை காவல் நிலையத்தில் 1 அடிதடி வழக்கு என மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. எனவே, ரவுடிகள் பாபு (எ) மிட்டாய் பாபு மற்றும் தேவா ஆகியோர்களின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு காந்திமார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் அறிக்கை கொடுத்துள்ளார்.

இந்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து கடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று ஆயுதங்களை காண்பித்து குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision