திருச்சியில் வயதானவரை மார்பில் உதைத்து தள்ளும் அதிர்ச்சி வீடியோ வைரல்.

திருச்சியில் வயதானவரை மார்பில் உதைத்து தள்ளும் அதிர்ச்சி வீடியோ வைரல்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (54). இவர் வையம்பட்டியில் தமிழ்செல்வம் என்பவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். தமிழ்செல்வத்திற்கும் வையம்பட்டியைச் சேர்ந்த ஷாஜகான் (44) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (10 ம்தேதி) இரவு தமிழ்செல்வன் வீட்டில் வேலை பார்க்கும் ராஜேந்திரன் வையம்பட்டி கடைவீதியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் நடந்து சென்ற போது வழிமறித்த ஷாஜகான் அவரை அடித்து கீழே தள்ளி காலால் உதைத்தும், மிதித்தும் தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த ராஜேந்திரன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் ஷாஜகான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரனை, ஷாஜகான் நெஞ்சில் உதைத்து கீழே விழுந்தவரை மீண்டும் உதைத்து மிதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதனை பார்ப்பவர்களை மனதை பதறவைத்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision