திருச்சியில் சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய விசித்திர பூஜை

திருச்சியில் சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய விசித்திர பூஜை

திருச்சி மாவட்டம் மணிகண்டம் குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்த வெங்கடேஷ் என்பவர் நேற்று முன் தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் பாலக்காட்டில் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவரது உடல் இறுதி சடங்கிற்காக திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நல்லிணக்க சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது காசியில் பயிற்சி பெற்று, திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வரும் அகோரி மணிகண்டன், தன் சிஷ்ய அகோரிகளுடன் உடல் முழுவதும் திருநீறு அணிந்து கொண்டு மயானத்தில் கூடியிருந்தனர்.

மயானத்தில் வெங்கடேசனின்
குடும்பத்தினர் செய்ய வேண்டிய இறுதி சடங்கை முடித்தபிறகு, அகோரி மணிகண்டன் சடலத்தின் மீது அமர்ந்து மந்திரங்கள் ஓதி ஆன்ம சாந்தி பூஜை செய்தார். அப்போது சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும் சங்கு ஒலி எழுப்பியும் பூஜையில் ஈடுபட்டனர்.

இறந்த வெங்கடேஷ் ஏற்கனவே அகோரி மணிகண்டனிடம் சிஷ்யராக இருந்துள்ளார். இதன் காரணமாகவே குடும்பத்தினரின் அனுமதியோடு ஆன்ம சாந்தி பூஜை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த வினோத பூஜையானது காசியில் மட்டுமே காணமுடியும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn