எச்சரிக்கையை மீறுவோர் மீது நடவடிக்கை - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

எச்சரிக்கையை மீறுவோர் மீது நடவடிக்கை - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

தமிழ்நாடு முதலமைச்சர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்ல இருப்பதால் நாளை (07.07.2024) திருச்சிர விமான நிலையம் வருகை தந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்லவுள்ளதால் அரசு பாதுகாப்பு காரணம் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

எனவே இன்று (06.07.2024) மாலை 6 மணி முதல் மறுநாள் (07.07.2024) முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision