திருச்சி மாநகரில் நாளை மறுநாள் (02.03.2024) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை மறுநாள் (02.03.2024) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து ஜோசப் கல்லூரி வளாகத்தின் வழியாக செல்லும் குடிநீர் உந்து குழாய் உடைப்பு ஏற்பட்டத்தின் காரணமாக பராமரிப்பு பணி (01.03.2024) அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை, ஆகிய பகுதிகளில் (02.03.2024) ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது. (03.03.2024) அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision