திருச்சியில் நாளை (15.10.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (15.10.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தில் நாளை (15.10.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் டி.எஸ்.பி கேம்ப், கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, அன்பு நகர், அருணாச்சலம் நகர், காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோ காலனி,

அரசு காலணி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டி புதூர், சொக்கலிங்கபுரம், ராமச்சந்திர நகர், ஆர்.எம்.எஸ் காலனி, கே.ஆர்.எஸ் நகர், ராஜீவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம் மற்றும் பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் நாளை (15.10.2022) காலை 9:45 மணி முதல் மாலை 3:00 மணி வரை விநியோகம் இருக்காது

இதேபோல் கல்லக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட நத்தம் புறநகர் உயர் அழுத்த மின்பு பாதையில் நாளை (15.10.2022) காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால் வந்தலை, கூடலூர், புதூர்பாளையம், வாண்டாரம்பாளையம், ஆலம்பாக்கம், கோவாண்டக்குறிச்சி, விராகாலூர், திண்ணக்குளம், ஆலம்பாடி, மேட்டுத்தெரு, தங்கச்சாலை, தனவலநல்லூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று லால்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO