திருச்சியில் நாளை மறுநாள் (11.06.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை மறுநாள் (11.06.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நகரியம் கோட்டம் உறையூர் பகுதிக்கு உட்பட்ட அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில் தேரோட்டம் (11.06.2022) சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளதால் தேரோட்டத்திற்கு மின் பாதைகள் இடையூறு இல்லாமலும், மின் விபத்து ஏதும் நடைபெறாமல் தவிர்க்கவும்

கீழ்க்கண்ட பகுதிகளான பஞ்சவர்ண சுவாமி கோவில் தெரு, ஆஸ்பத்திரி ரோடு, நவாப்தோட்டம் மற்றும் டாக்கர் ரோடு ஆகிய பகுதிகளில் (11.06.2022) சனிக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO