இனி... பேருந்து பயணத்தில் இயர்போன் இல்லாமல் பாடல்கள் கேட்கத் தடை -மாநில அரசு அதிரடி

இனி... பேருந்து பயணத்தில் இயர்போன் இல்லாமல் பாடல்கள் கேட்கத் தடை -மாநில அரசு அதிரடி

 பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பேசவும், பாடல்கள் கேட்கவும், வீடியோ கேம் விளையாடவும் தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. 

பேருந்துகளில் பயணம் செய்கிற போது பிற பயணிகளுக்கு கோபம், எரிச்சல் போன்றதொந்தரவுகளை ஏற்படுத்துகிற வகையில் செல்போன் பயன்பாடு அதிகரித்து வந்த நிலையில் பிரச்சினை ஏற்படுகிறபோது பயணிகள் நடத்துனரிடர் புகார் செய்கிற போது பிரச்சினைக்குரிய நபரிடம் நடத்துனர் வேண்டுகோளை முன்வைக்கிறபோது சில பயணிகள் தகராறு செய்து பிரச்சினையை பெரிது படுத்தி விடுகிறார்கள். இதை கட்டுபடுத்த உரிய அதிகாரம் இல்லாததால் நடந்துனர் ஓர் எல்லைக்குமேல் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிற வகையில் திருப்பூரைச் சேர்ந்த திரு. கே. எல் பொன்னுச்சாமி என்பவர் இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியதன் பேரில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இனிமேல் பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பிற பயணிகளுக்கு தொல்லை ஏற்படுத்தினால் பயணியைப் பேருத்திலிருது இறக்கிவிடவும் பயணக்கட்டனத்தை இழக்கவும் ,ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO