ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாக்கை பெற அருண் நேருவின் அன்பு கடிதாசி

ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாக்கை பெற அருண் நேருவின் அன்பு கடிதாசி

வருகின்ற 19.04.2024 ஆம் தேதி நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பாக பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளராக மாண்புமிகு.கழகத்தலைவர் தளபதி அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள அருண்நேரு ஆகிய நான் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு களம் காண்கிறேன்.

இந்தியாவில் முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் அனைத்து ஊதிய குழுவும் அமைக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் இறந்தால் குடும்ப நலநிதி அறிவிக்கப்பட்டு, கருணை அடிப்படையில் பணியும் வழங்கப்பட்டது. சிகப்பு நாடா முறை ஒழிக்கப்பட்டது போன்ற பற்பல நலத்திட்டங்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் அரசியல் அமைப்புச்சட்டம் பறிபோகாமல் பாதுகாக்கவும். அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் நலன் பாதுகாக்கவும்.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றவும் பாடுபடுவேன் என உறுதி அளிக்கிறேன்.

எனது தந்தை மாண்புமிகு. கே.என்.நேரு அவர்கள் 38 ஆண்டுகளாக திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு பற்பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களைப் பின்பற்றியும், எனது தந்தை மாண்புமிகு கே.என்.நேரு அவர்களின் வழிகாட்டுதலின்படியும், உங்கள் அனைவரின் ஆதரவோடும் செயல்படுவேன் என உறுதி அளிக்கிறேன்.

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் பெருமக்கள் அனைவரும் அருள்கூர்ந்து பெரம்பலூர் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் அன்புடன் இருகரம்கூப்பி வேண்டுகிறேன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision