விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம். கிணற்றுநீரில் சிக்கிய மாணவன் பலி.

விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம். கிணற்றுநீரில் சிக்கிய மாணவன் பலி.

விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம். கிணற்றுநீரில் சிக்கிய மாணவன் பலி.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சக்தி பிரகாஷ் (வயது 21). இவர் திருச்சி கேர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பை விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

சக்தி பிரகாஷ்க்கு நேற்று பிறந்தநாள். எனவே நேற்று மாலை சக மாணவர்கள் 10 பேருடன் இணைந்து கல்லூரி வளாகத்திற்கு அருகாமையில் உள்ள பூங்குடி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் அந்த கிணற்றுக்குள் இறங்கி மாணவர்கள் அனைவரும் குளித்துள்ளனர்.

இதில் எதிர்பாராத விதமாக சக்தி பிரகாஷ் நீரில் மூழ்கினார். சக மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் தீயணைப்பு படை வீரர்கள் அந்த மாணவனை மீட்க முயற்சியில் கிணற்று நீரை மோட்டார் இயந்திரங்களின் உதவியுடன் வெளியேற்றினார்கள். பின்னர் சக்தி பிரகாஷ்யை சடலமாக மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision