காதலனை சேர்த்து வைக்க கோரி காதலி தீக்குளிக்க முயற்சி- காவல்துறையினரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

காதலனை சேர்த்து வைக்க கோரி காதலி தீக்குளிக்க முயற்சி- காவல்துறையினரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

திருச்சிமாவட்டம். வையம்பட்டி அருகே சரளப்பட்டியை சேர்ந்த சின்னசாமி மகள் பவித்ரா(25) என்பவரை அதே ஊரில் வசிக்கும் உறவினரான தேவராஜ் மகன் தமிழரசன்(23) என்பவர் கடந்த 4வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே தமிழரசனை காதலித்து வந்த பவித்ரா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காதலனிடம் வற்புறுத்தியுள்ளார். தொடர்ந்து பவித்ராவை ஏமாற்றும் விதத்தில் திருமணம் செய்துகொள்ள காதலன் தமிழரசன் மறுத்த நிலையில், தான் ஏமாற்றப்பட்டதையறிந்த பவித்ரா அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். 

இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் முறையிட்டனர். அப்போது தன்னை காதலித்து ஏமாற்றிய காதலன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது காதலனுடன் சேர்த்து வைக்கவேண்டும் எனக்கூறி பாதிக்கப்பட்ட பெண் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

 இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்தி அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். 

மேலும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அனைத்து மகளிர் போலீசாரை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண் அவரது உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவயிடத்துக்கு சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO