திருச்சியில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் மீது தாக்குதல்

திருச்சியில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் மீது தாக்குதல்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில் வழியாக பெருவளப்பூர் செல்லும் அரசு பேருந்து நேற்று வியாழக்கிழமை இரவு ஒன்பது மணி அளவில் கல்லுக்குழி கிராமத்தினை கடந்தது.

அப்போது திடீரென அரசு பேருந்தினை வழிமறித்த அடையாளம் தெரியாத நான்கு கஞ்சா போதை ஆசாமிகள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனை கண்ட பயணிகள் தட்டிக் கேட்க பயணிகளையும் தாக்கியதுடன் கத்தியை காட்டி மிரட்டினர். இது குறித்து பயணிகள் சமயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது அறிந்த கஞ்சா போதை ஆசாமிகள் தப்பி சென்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார் இது குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தி தப்பியோடிய நான்கு கஞ்சா போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision