திருச்சி பேராசிரியரை ஆபாச வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் கைது

திருச்சி பேராசிரியரை ஆபாச வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் கைது

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் கொண்ட இவர், செல்போனில் கிரைண்டர் ஆப் என்ற செயலியை பார்த்து, அதற்கு லைக் கொடுத்துள்ளார். இந்த செயலியின் மூலம், அவருக்கு பாலிடெக்னிக் மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் 3 சிறுவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து சமூக வலைதளத்தில் பேசி வந்த அவர்கள், நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சேந்தமங்கலம் அருகே அந்த பேராசிரியரை, சிறுவர்கள் வரவழைத்துள்ளனர். அவர்களது அழைப்பை ஏற்று வந்த பேராசிரியரை, ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற சிறுவர்கள், அங்கு ஓரின சேர்க்கையில் அவரை ஈடுபடுத்தி உள்ளனர். மேலும், அதனை செல்போனில்வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

பின்னர், அந்த பேராசிரியை தாக்கி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு அவரை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என கருதிய பேராசிரியர், இதுகுறித்து புகார் அளிக்கவில்லை. இதனிடையே, பேராசிரியருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட போது எடுத்த, அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவேற்றினர். அந்த வீடியோ, சேந்தமங்கலம் சுற்றுப்பகுதிகளில் வைரலாக பரவியது.

எதேச்சையாக இந்த வீடியோவை பார்க்க நேரிட்ட பொன்னேரி கிராம நிர்வாக அலுவலர் தனம், இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், அவர் எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், அந்த வீடியோவை கொண்டு விசாரணை நடத்திய போலீசார், ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு பேராசிரியரை தாக்கி செல்போன் பறித்த 3 சிறுவர்களையும் நேற்று கைது செய்தனர்.

அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பேராசிரியர் ஒருவர் சிறுவர்களுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision