மின் சேமிப்பு பற்றி நடமாடும் வாகனம் மூலம் விழிப்புணர்வு

மின் சேமிப்பு பற்றி நடமாடும் வாகனம் மூலம் விழிப்புணர்வு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை மின் சேமிப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் திருச்சி மின் பகிர்மான வட்டம் பெருநகரம் சார்பில் 14.12.2021ஆம் தேதி முதல் 20.12.2021ஆம் தேதி வரை மின் சேமிப்பு வாரவிழா கடைபிடிக்க உள்ளது.

இதன் ஒருபகுதியாக மின் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் வாகனம் மூலம் திருச்சி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் விழிப்புணர்வு நடமாடும் வாகனத்தை திருச்சி மண்டல செயற்பொறியாளர் அருள்மொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேற்பார்வை பொறியாளர் வீரமுத்து, செயற்பொறியாளர்கள் முத்துராமன், பிரகாசம், சிவலிங்கம், அன்புசெல்வம், லால்குடி பொறிஞர் அன்புச்செல்வன், மணப்பாறை பொறிஞர் சிவக்குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn