ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி- கைது

ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி- கைது

திருச்சி, திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10.50 மணியளவில் வருகை தர உள்ள நிலையில், தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரை கண்டித்து திருவானைக்காவல் சிக்னல் பகுதியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென சாலையில் சென்ற பேருந்துகளை மறித்து, சாலையில் படுத்தபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை தடுத்து கைது செய்ததுடன், சிலரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision