ஶ்ரீரங்கம் கோயில் மாதாந்திர உண்டியல் காணிக்கை விபரம்

ஶ்ரீரங்கம் கோயில் மாதாந்திர உண்டியல் காணிக்கை விபரம்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் (20.04.2022) இன்று கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டது.

பின்னர் உதவி ஆணையர்கள் கு.கந்தசாமி, செ.மாரியப்பன் ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்களால் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணபட்டது.

இதில் ரூபாய் 63 இலட்சத்து 96 ஆயிரத்து 860 ரொக்கமும், 115 கிராம் தங்கமும், 750 கிராம் வெள்ளியும், 59 அயல்நாட்டு கரன்சியும் கிடைக்கப் பெற்றன. இந்த மாதாந்திர உண்டியல்கள் எண்ணிக்கை நடைபெற்ற இடம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO