போதை மாத்திரை விற்ற சிறுவன் கைது

போதை மாத்திரை விற்ற சிறுவன் கைது

திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகரை சேர்ந்தவர் காமராஜ் (39). இவர் பொன்மலைப்பட்டி மெயின் ரோடு ஆஞ்சநேயர் கோவில் அருகே சைக்கிளில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அங்கு வந்த 17 வயது சிறுவன் ஒருவன் காமராஜிடம் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயற்சித்துள்ளான்.

இதுகுறித்து காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் சிறுவனை கைது செய்துள்ளனர். மேலும் அந்த சிறுவனுக்கு போதை மாத்திரை எங்கிருந்து கிடைத்தது? யார் விற்பனை செய்ய கொடுத்தார்கள் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision