2 ஏக்கர் நிலத்திற்காக அண்ணனை கொலை செய்த தம்பி கைது

2 ஏக்கர் நிலத்திற்காக அண்ணனை கொலை செய்த தம்பி கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பெருமாள் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (57). விவசாயியான இவருக்கு திருமணம் ஆகி கலைச்செல்வி என்ற மனைவியும்,கிஷோர்குமார், தனபால் என்ற இரண்டு மகன்கள் மற்றும் சுபா நந்தினி மகள் உள்ளனர். இவரது உடன் பிறந்த சகோதரர் சந்திரசேகர் (49) லாரி டிரைவராக உள்ளார். அண்ணன் தம்பி இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் பிரித்ததில் முன் விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி தனது வயல் காட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது தம்பி சந்திரசேகர் வழி மறித்து கிருஷ்ணமூர்த்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை, கை, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த இடத்தில் சந்திரசேகர் அமர்ந்து கொண்டு யாரையும் நெருங்க விடாமல் இருந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்திரசேகரன் பிடித்தனர்.

ஆனால் சந்திரசேகரன் உடலிலும், தலையிலும் காயங்கள் இருந்ததால் அவரை சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இறந்த கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக உடன் பிறந்த சகோதரரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision