திருச்சியில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பிரச்சாரம்

திருச்சியில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பிரச்சாரம்

BHEL திருச்சியில் சங்க அங்கீகார தேர்தல் வருகிற 23.06.2022 அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி BHEL கிழக்கு வாயிலில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பங்கேற்ற உரையாற்றினார். இதில் சிஐடியு சங்கத்தை, தொழிலாளர்கள் வாக்களித்து முதன்மை சங்கமாக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தொழிலாளர்களிடம் பிரச்சாரம் செய்தார்.

மேலும் மத்திய அரசாங்கம் பொதுத்துறைகளை ஒவ்வொன்றாக அழித்து விற்று வருகிறது. தொழிலாளர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று ஒன்று சேர்ந்து எதிர்த்து நின்றால் மட்டுமே பாதுகாக்க முடியும்.அப்படிப்பட்ட பிஜேபி அரசினுடைய பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு

சிஐடியு தலைமை தாங்கி நடத்துவதற்கு தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். இந்த கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட BHEL தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

G-QSXGXN2B7K