ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம், ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம், ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சர்

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் திரு.எல்.முருகன் திருச்சிக்கு நேற்று இரவு வருகை தந்தார். பின்னர் இன்று காலை பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்து ரெங்கநாதர் மற்றும் ரெங்க நாச்சியாரை தரிசனம் செய்தார்.

இதனை தொடர்ந்து இக்கோவிலில் உள்ள கோ-சாலைக்கு சென்ற அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார். பின்னர் மாடுகள், குதிரைகள் பராமரிக்கும் விதம் குறித்து அங்குள்ள பணியாளரிடம் கேட்டறிந்தார் தொடர்ந்து தாயார் சன்னிதி தரிசனம் செய்தவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு தரிசனம் செய்த பின்னர், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி, அடுத்து கோட்டபாளையம் பகுதியிலுள்ள சாமி தரிசனம் செய்த பின் சாலை வழியாக பெரம்பலூருக்கு செல்கிறார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO