திருச்சியில் திமுக பிரமுகரின் வாகனம் உள்ளிட்ட கனரக வாகனங்களில் 25 பேட்டரிகளை திருடியவர் சிசிடிவி காட்சி வெளியீடு

திருச்சியில் திமுக பிரமுகரின் வாகனம் உள்ளிட்ட கனரக வாகனங்களில் 25 பேட்டரிகளை திருடியவர் சிசிடிவி காட்சி வெளியீடு

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் நின்று கொண்டிருக்கும் ஜே சி பி, லாரிகள், பென்ஸ் ரக லாரி உள்ளிட்டவைகளில் உள்ள பேட்டரிகளை ஒருவர் தொடர்ந்து திருடி கொண்டே இருக்கிறார்.

கடந்த (07.09.2023) அன்று திமுக பிரமுகர் கருப்பையா என்பவரின் ஜேசிபி வாகனத்தில் இருந்த பேட்டரி திருடிய அந்த நபர் தொடர்ந்து அன்று இரவில் இருபதுக்கும் மேற்பட்ட பேட்டரிகளை அப்பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் நிற்கும் வாகனங்களில் திருடியது தெரியவந்துள்ளது. மேலும் மறுநாள் (08.09.2023)ம் தேதியன்று பட்டப் பகலில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை அருகே பெட்ரோல் பங்க் முன்னதாக நிறுத்தப்பட்டிருந்த பென்ஸ் வகை லாரியில் உள்ள 27 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரியை திருடி இருசக்கர வாகனத்தில் அந்த நபர் கொண்டு செல்லும் சிசிடிவி காட்சி தற்பொழுது கிடைத்துள்ளது.

இது தொடர்பாக லாரியின் உரிமையாளர் செல்வராஜ் இனாம்குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சிசிடிவி காட்சிகளையும் போலீசாரிடம் கொடுத்து ஒரு வாரம் மேலாகியும் இன்னும் குற்றவாளியை கைது செய்யாமல் உள்ளனர் என புகார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் நிற்கும் வாகனங்களில் அலேனக்கா பேட்டரி திருடி எடுத்து செல்லும் இந்த பேட்டரி திருடனை உடனடியாக கண்டுபிடித்து தர வாகனத்தின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் மிக முக்கியமாக வாகனங்களில் பதிவன் இல்லாமல் உள்ளவர்களை காவல்துறையினர் உடனடியாக பிடித்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் பேட்டரிகளை எடுத்துச் செல்லும் இரு சக்கர வாகனத்திலும் நம்பர் பிளேட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision