திருச்சியில் களைகட்டிய ஹோலிப்பண்டிகை!!

திருச்சியில் களைகட்டிய ஹோலிப்பண்டிகை!!

வண்ணமயமான பண்டிகையான ஹோலிப்பண்டிகை இன்று நாட்டின் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. ஏராளமானோர் பல வண்ணப்பொடிகளை தூவி உற்சாகமாக ஹோலி கொண்டாடி வருகின்றனர். திருச்சியிலும் ஹோலி பண்டிகை களைகட்டியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளதால் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஹோலி பண்டிகை களையிழந்து காணப்படுகிறது.

Advertisement

தீபாவளி பண்டிகையை அடுத்து இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

அந்த வகையில் திருச்சி பெரிய கடைவீதி பகுதி பெரிய கம்மாள தெரு பகுதியில் ஹோலி கொண்டாட்டம் களை கட்டியது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலர் பொடிகளை தூவி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW