தேர்வு பணிகள் ரத்து - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

தேர்வு பணிகள் ரத்து - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

திருச்சிராப்பள்ளி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல 
அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்படடோர் & மிகப்பிற்படுத்தப்பட்டோர் & சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை (ஆண் - 25, பெண் -15 மொத்தம் 40 சமையலர்) 
நிரப்புவதற்கு 2020-ஆம் ஆண்டில் நாளிதழ் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில்  மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் பொது விளம்பரம் மூலம் பணிநாடு நர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் நடைபெற்ற தேர்வுப் பணிகள் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn