ஸ்ரீரங்கத்தில் கொட்டும் மழையிலும் முதல்வர் சாமி தரிசனம் - பரப்புரை!

ஸ்ரீரங்கத்தில் கொட்டும் மழையிலும் முதல்வர் சாமி தரிசனம் - பரப்புரை!

திருச்சியில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் திருச்சியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

Advertisement

இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் கோவிலில் தமிழக முதல்வர் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கா, ரங்கா கோபுரம் முன்பு கோயில் இணை ஆணையர் ஜெயராமன் , பட்டர்கள் சுந்தர்,நந்து ஆகியோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். பின்பு, அரங்கநாதர், தாயார் சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து வெள்ளை கோபுரம் வழியாக வெளியே வந்த முதல்வர் காய்கறி மார்க்கெட், சாத்தார வீதியில் பொதுமக்களை சந்தித்து வருகிறார். தொடர்ந்து இராஜகோபுரம் முன்பு வரவேற்பு நிகழ்ச்சியடுத்து மக்களிடம் உரையாற்றவும் உள்ளார்.

Advertisement

கொட்டும் மழையிலும் ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்து அதிரடியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a