ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் கொடூர கொலை - மறைக்க நாடகம்

ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் கொடூர கொலை - மறைக்க நாடகம்

மயிலாடுதுறை மூவலூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜலிங்கம் மகன் ராஜ்குமார் வயது 20 என்பவர் மறையூரை சேர்ந்த சுரேஷ் மேஸ்திரி என்பவரிடம் சித்தாள் வேலைக்கு சென்று வந்ததுள்ளார்.... 29 10 2022 காலை 08.00 மணிக்கு வேலைக்கு சென்றவர் இரவு முழுவதும் வீடு திரும்பாததால் 30.10.2022 தேதி காலை ராஜ் குமாரை அவரது தந்தை ராஜலிங்கம்பல இடங்களிலும் தேடி வந்துள்ளார்.அப்போது சித்தர் காடு தெற்கு தெருவை சேர்ந்த குருமூர்த்தி மகன் கபிலன்  என்பவரும் மூவலூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவரும் 
தனது‌ மகன் ராஜ்குமாரை முதல் நாள் இரவு பைக்கில் அழைத்து சென்றதாக கேள்விப்பட்டு
உள்ளார்.

இந்த நிலையில ராஜ்குமார் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கும் மங்கநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது... 
அங்கே சென்று பார்த்தபோது ராஜ்குமார் தண்டவாளத்தின் நடுவில் உடம்பில் துணி ஏதும் இல்லாமல் நிர்வாணமாக இறந்து கிடந்ததையும்... அவரின் தலையின் பல இடங்களில் காயங்கள்  இருந்ததையும் கொண்டு தனது மகனை சித்தர் காடு தெற்கு தெருவை சேர்ந்த குருமூர்த்தி மகன் கபிலனும்  மூவலூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த பள்ளி மாணவரும் சேர்ந்து கொலை செய்து தண்டவாளத்தில் போட்டுள்ளதாக ராஜலிங்கம் மயிலாடுதுறை இருப்புப்பாதை காவல் நிலையத்தில்  புகார் கொடுத்துள்ளார்... 
அதனை அடுத்து மயிலாடுதுறை இருப்பு பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு  செய்துள்ளனர்... 

உடனடியாக  மயிலாடுதுறை இருப்பு பாதை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. சாந்தி அவர்கள் இறந்து போன ராஜகுமாரின் பிரேதத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது பிரேத பரிசோதனையில் ராஜ்குமார் கொலை செய்யப்பட்டார் என்பதை கண்டறிந்தும்bகொலை செய்த நபர்களான கபிலன் மற்றும் அவருடன் சேர்த்த பள்ளி மாணவன் இருவரையும் பிடிக்க திருச்சி இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் அதிவீர பாண்டியன்  உத்தரவு படி‌ திருச்சி இருப்புப்பாதை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன்  மேற்பார்வையில்
சிதம்பரம் இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் அருண் குமார்
மயிலாடுதுறை இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் தலைமையில்
இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது...

தனிப்படையினர்
சித்தர் காட்டை சேர்ந்த கபிலன் வயது - 22 த/பெ. குருமூர்த்தி என்பவரையும்... 
மூவலூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவரையும் கைது செய்து விசாரணை நடத்தி உள்ளனர்.தனிப்படையினர் விசாரணையின் போது கபிலனுக்கும் பள்ளி மாணவருக்கும் இடையே ஓரின சேர்க்கை பழக்கம் நெடுநாட்களாக இருந்துள்ளதும் அவர்கள் இருவரும் சேர்ந்து 
ராஜ்குமாரையும் ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த முடிவு செய்து 29.10.2022 அன்று இரவு ஏற்கனவே மது போதையில் இருந்த ராஜ்குமாரை மஞ்சளாறு பாலத்தின் தண்டவாளத்திற்கு கபிலனின் பைக்கில் அழைத்து சென்றும் ஏற்கனவே மது போதையில் இருந்த ராஜ்குமாருக்கு மேலும் மதுவை ஊற்றி கொடுத்து அதிக போதையில் இருந்த ராஜ்குமாரின் ஆடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக்கி ஓரின சேர்க்கையில் (ஹோமோ செக்ஸில்) ஈடுபடுவதற்கு  கட்டாய படுத்தி உள்ளனர்.

அதற்கு ராஜ்குமார் ஒத்துக் கொள்ளாததால் 
கபிலன் பீர் பாட்டிலால் ராஜ்குமார் தலையில் அடித்துள்ளார்.மது போதையில் இருந்த 
ராஜ்குமார் சுதாரித்து அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றுள்ளார்.அதனால் தங்களின் ஓரின சேர்க்கை விபரம் வெளி உலகிற்கு தெரிந்துவிடுமோ என்று பயந்து... மேலும் ஆத்திரமடைந்த கபிலனும் பள்ளி மாணவனும் ராஜ்குமாரை இரயில் தண்டவாளத்தில் கீழே தள்ளி உடைந்த பீர் பாட்டிலால் தலையில் குத்தியும் கருங்கல்லால் தலையில் தாக்கியும்  கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு விட்டு இரயில் அடிபட்டு செத்ததாக தெரியும்படி ஜோடித்துள்ளனர்.

ஆனால் ராஜ்குமார் உடலானது இரண்டு தண்டவாளங்களுக்கும் இடையே கிடந்ததால் இரயிலில் அடிபடவில்லை..அதன் காரணமாக எதிரி கபிலனை மற்றும் பள்ளி மாணவனின் சதி திட்டம் நிறைவேறாமல் போய்... தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.முக்கியமான கொலை வழக்கில்... எந்தவொரு துப்பும் இல்லாத நிலையில் 
18 மணி நேரத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த தனிப்படையினரை இருப்புபாதை காவல்துறை கூடுதல் இயக்குனர்
வனிதா IPS திருச்சி இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் பாராட்டி வெகுமதி வழங்கியுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0


#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO