திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா - லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா - லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு புகழ்பெற்ற ஸ்தலமாக விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை தேரோட்டம் துவங்கியது.

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் தேரோட்ட விழாவை பொருத்தவரை திருச்சி மட்டுமல்லாது அரியலூர், பெரம்பலூர் புதுக்கோட்டை கரூர் தஞ்சாவூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் அலகு,அக்னி சட்டி போன்ற நேர்த்திக்கடனை எடுத்து வந்து அம்மனை வழிபடுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேரத்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision