காலை 6மணிக்கே வீதியில் இறங்கி அதிரடி காட்டும் ஆணையர்

காலை 6மணிக்கே வீதியில் இறங்கி அதிரடி காட்டும் ஆணையர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் -4 .வார்டு எண் - 63 வார்டு கே.கே .நகர் ராஜாராம் சாலையில் ,  துப்புரவு மேற்பார்வையாளர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேடு குறித்தும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் -4 .வார்டு எண் - 63 வார்டு கே.கே .நகர் உடயான்பட்டி ரோடு, உஸ்மான் அலி தெரு பகுதியில் சுகாதார ஆய்வாளர்ருடன் தூய்மை பணி மேற்கொள்வதை காலை 6 மணிக்கு ஆய்வு செய்தார்.

மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வில் குப்பைகள் சாலையில் இல்லாதவாறு தினந்தோறும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று துப்புரவு ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டார். ஒரு பெற்ற ஒரு வாரத்துக்குள் தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் வீதிக்கு வந்து மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களின் பணிகளை நேரடி ஆய்வு நடத்தும் அதிரடி ஆணையரின் செயல்பாடு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO