பழம், வெற்றிலை, காணிக்கை தட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய்-மகன் தர்ணா

பழம், வெற்றிலை, காணிக்கை தட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய்-மகன் தர்ணா

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அளுந்தலைப்பூர் கிராமத்தின் வடக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்த்ராஜ். இவருக்கு சொந்தமான இடத்தில் பேஸ்மண்ட் போட்டு கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் எழுப்பி உள்ளார். இந்நிலையில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வேண்டி புள்ளம்பாடி கிராம நிர்வாகத்தை நாடியுள்ளார். இந்நிலையில் பலமுறை அலைந்தும் அனுமதி வழங்க முடியாது என்று ஊராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது தாய் சரசுவதியுடன் வந்த அரவிந்த்ராஜ் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தனது பிரச்சனையை தீர்க்க தமிழக முதல்வர் உடனடியாக நேரில் வரவேண்டும் என வலியுறுத்தி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் ஆப்பிள், ஆரஞ்ச், வெற்றிலை பாக்கில் 51 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை வைத்து தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுப்பதாக கூறி முதலமைச்சர் நேரில் வரவேண்டும் என்று தெரிவித்து ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் தாய், மகனை கைது செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO