முக்கொம்பு புதிய பாலம் கட்டும் பணி இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் நிறைவு பெறும். சந்தீப் சக்சேனா பேட்டி.

முக்கொம்பு புதிய பாலம் கட்டும் பணி இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் நிறைவு பெறும். சந்தீப் சக்சேனா பேட்டி.

திருச்சி மாவட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை பொதுப் பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
இதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுடன் நவல்பட்டு பகுதியில் காட்டாறில் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்.. தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத்துறை மூலம்  கடந்த மாதம் 17ஆம் தேதி காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிக்காக திருச்சி மண்டலத்தில் 589 பணிகளுக்கு ரூபாய் 62.90 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது.

மேட்டூர் அணை திறப்பு குறித்து தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னையில் இருந்தே கண்காணிப்புக்குழு அலுவலர் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அரியலூர், கரூர், திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து காணொலி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடைபெற்றதில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டத்தில் நடப்பாண்டில் 78 ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்காக சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் நாற்று நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும்.  மேட்டூரில் தற்போது 91அடி  நீர் உள்ளது. நீர்  திறப்புக்கான பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறோம். தூர்வாரும் பணிகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் சரியான முறையில் நடைபெற்று வருகிறது.

தூர்வாரும் பணிகள் ஏபிசி என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு, முதலில் நீர் பாசனம் பெறும் பகுதிக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் தொடங்கப்படும் அதனைத் தொடர்ந்து பி,சி பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படும். சரியான நேரத்தில் நடைபெறுவதுடன், பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏதும் இருக்காது ஆண்டுதோறும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகளுக்கு தடையின்றி பாசன வசதி பெற வேண்டும் என்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதால் இதனை நான் அரசியலாக்க விரும்பவில்லை. தூர்வாரும் பணிகள் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் ஏதேனும் இருந்தால் அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். முக்கொம்பு புதிய பாலம் கட்டும் பணி இன்னும் நான்கைந்து மாதங்களில் நிறைவு பெறும் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC