திருச்சியில் 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று - ஒரு வாரம் பள்ளி விடுமுறை

திருச்சியில் 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று - ஒரு வாரம் பள்ளி விடுமுறை

திருச்சி சோமரசம்பேட்டை அருகே இரட்டை வாய்க்காலில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் 17 வயது மாணவிக்கு காய்ச்சல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் மாணவிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் நடத்திய ஆலோசனை செய்து பள்ளி இன்று முதல் ஒருவாரம் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

மேலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும்,  அடுத்த திங்கட்கிழமை முதல் பள்ளி வழக்கம் போல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn