திருச்சியில் முன்னாள் கவுன்சிலர் மகள்கள் பிஎஸ்என்எல் ஊழியர்களிடம் தகராறு போலீஸாரிடம் புகார்

திருச்சியில் முன்னாள் கவுன்சிலர் மகள்கள் பிஎஸ்என்எல் ஊழியர்களிடம் தகராறு போலீஸாரிடம் புகார்

திருச்சி அரியமங்கலம் பகுதியில் Bsnl - Fiber Cable ஊழியர்கள் கேபிள் பதிக்கும் ஒயரிங் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அதிமுக முன்னாள் கவுன்சிலர் கயல்விழி சேகரின் 2 மகள்கள் அந்த ஊழியர்களை தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர்.அவர்களிடம் இருந்து 1100 மீட்டர் ஒயர் மற்றும் அலுமினிய ஏணி ஆகியவற்றை பிடுங்கி இனிமேல் இந்த பகுதிக்கு வரக்கூடாது  என மிரட்டி உள்ளார்கள். 

மேலும் இது குறித்து பிஎஸ்என்எல் முகம்மது சித்திக் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முன்னாள் கவுன்சிலர் மகள்கள்  கேபிள் பதிக்கும் ஊழியர்களிடம் தகராறு செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO