திருச்சி எம்.பியை கண்டித்து தர்ணா - அலுவலகத்திற்கு பூட்டு

திருச்சி எம்.பியை கண்டித்து தர்ணா -  அலுவலகத்திற்கு பூட்டு

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த ஜவகர் மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைவராக ரெக்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யாமல் திருநாவுக்கரசர் பரிந்துரையின் பெயரில் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்,

தன்னிச்சையாக செயல்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

திருநாவுக்கரசரின் புகைப்படத்தை அடித்து, தாக்கி அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தை பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision