மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-23 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் வரும் 2023 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண் / பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படவுள்ளது.

போட்டி முன் பதிவு : முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in இணையதளம் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ள விதிமுறைகள் : பொதுப்பிரிவு : இதில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கையுந்துப்பந்து, ஆகிய விளையாட்டுகளுக்கு பொதுப்பிரிவல் உள்ளவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

பள்ளி : இதில் 12 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள் பள்ளியிலிருந்து Bonafied certificate உடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். கல்லூரி (கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்ப பயிலகங்கள் உள்ளிட்ட அனைத்தும்) : இதில் 17 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் கல்லூரியிலிருந்து Bonafied certificate கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துப்பந்து, மேசைப்பந்து, ஆகிய விளையாட்டுகள் மாவட்ட அளவிலும் மற்றும் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை மண்டல அளவிலும் நடத்தப்படவுள்ளது.

மாற்றுத்திறனாளி : வயது வரம்பு இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். மாற்றுத்திறனாளி - 50மீ ஓட்டம், இறகுப்பந்து, பார்வைத்திறன் மாற்றுத்தினாளி – 100மீ ஓட்டம், சிறப்பு கையுந்துபந்து, மனவளர்ச்சி குன்றியோர் – 100மீ ஓட்டம், எறிபந்து செவித்திறன் மாற்றுத்திறனாளி - 100மீ ஓட்டம், கபாடி. ரசு ஊழியர்கள் : வயது வரம்பு இல்லை – கபாடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்துபந்து மற்றும் சதுரங்கம். பொதுப்பிரிவு மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு மாவட்ட அணிகளின் சார்பாக மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். தனிநபர் போட்டிகளில் தரவரிசையின்படி சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். பரிசுத் தொகை மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு : முதல் பரிசு ரூ.3000/-, இரண்டாம் பரிசு ரூ.2000/- மற்றும் மூன்றாம் பரிசு ரூ.1000/- ஒவ்வொரு போட்டியிலும் மாநில அளவில் முதல் மூன்று இடங்கள் பெறுவோருக்கு பரிசுத் தொகையுடன் முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும்.

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்புக்கான முதலமைச்சர் கோப்பை – மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அதிக பதக்கங்கள் பெற்று முதல் மூன்று இடம் பெறும் மாவட்டங்களுக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்புக்கான முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும். மேலும், முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி தொலைபேசி எண். 0431-2420685 / 7401703494 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn