திருச்சி அருகே கதண்டு கடித்து டிரைவர் பரிதாபமாக பலி!

திருச்சி அருகே கதண்டு கடித்து டிரைவர் பரிதாபமாக பலி!

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே டிரைவரை கதண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Advertisement

மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தி பகுதியை சேர்ந்தவர் ராஜாராம்(50). இவர் லாரி டிரைவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கொள்ளிடக் கரையில் லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியில் சென்றுள்ளார். 

Advertisement

அப்போது எதிர்பாராத விதமாக அவரை கதண்டு சூழ்ந்து கடித்தது. இதனால் துடிதுடித்து கத்திய அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.