குடிபோதையில் தகராறு - தீ குளித்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை!

குடிபோதையில் தகராறு -  தீ குளித்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை!

திருச்சி கே.சாத்தனூர் கீழ தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (43). இவர் ஆட்டோ ஓட்டும் வேலையை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி  8ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.

Advertisement

இந்நிலைநில் இவர் குடிபோதையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி கொண்டு தானே தீ வைத்துக் கொண்டார். பின்னர் வீட்டில் அலறல் சத்தம் கேட்ட உடனே அருகில் இருந்தவர்கள் மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 Advertisement

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS