குடிபோதை மற்றும் செல்போன் அடிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி

குடிபோதை மற்றும் செல்போன் அடிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் தேனூர் கிராமத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முசிறி சமூக பணித்துறை மாணவர்கள் மற்றும் திருச்சி காஜாமலை மகளிர் மன்றம் குடிபோதை மறுவாழ்வ மையம் இணைந்து குடிபோதை மற்றும் செல்போன் அடிமை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முருகராஜ் பாண்டியன் மற்றும் தேனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் தலைமை தாங்கினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மன நல ஆலோசகர் தினேஷ் குமார் அவர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர் எர்ஹார்ட் மார்ஷல் வாழ்த்துரை வழங்கினார்.

சமூக பணித்துறை மாணவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு செய்தனர். பாலமணிகண்டன் மற்றும் அன்பு ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision