நாளை நிறைவேற்றப்பட உள்ள தேர்தல் சீர்திருத்த மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுக்க வேண்டும் - வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி

நாளை நிறைவேற்றப்பட உள்ள தேர்தல் சீர்திருத்த மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுக்க வேண்டும் - வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ்,லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத் தரகர்கள் நல சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்... கட்டுமான நல 
சங்கத்தினர் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை நிலத்தரகத்களை அமைப்பு சாரா தொழிலாளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்பதாகும் இது நியாயமான கோரிக்கை. எனவே தமிழக அரசு அவர்களை அமைப்புசாரா தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மக்களவையில் நாளை தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. பல்வேறு மசோதக்களை தாக்கல் செய்தாலும், இந்த மசோதவை தாக்கல் செய்வதற்கு அறிமுக நிலையிலேயே தடுக்க வேண்டும். திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுத்து கூடிய கோரிக்கை இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட வேண்டும்.

இந்த சட்டத்திருத்த மசோதா வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் ஆதார் என்னோடு இணைப்பதற்கு வழிவகை செய்கிறது. இது மிகவும் ஆபத்தானது, தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு வாக்களிக்க சிறுபான்மையினரை நீக்குவதற்கு இது ஏதுவாக அமைந்துவிடும். எனவே இது மிகவும் ஆபத்தான மசோதா, இதனை அனைத்து கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn