தற்கொலைக்கு முயன்ற மின்வாரிய ஊழியர் - காப்பாற்ற முயன்ற 3 பேர் காயம்

தற்கொலைக்கு முயன்ற மின்வாரிய ஊழியர் - காப்பாற்ற முயன்ற 3 பேர் காயம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொப்பம்பட்டி அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் நோபில். இவர் மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இவர் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

இதனால் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டரை திறந்து பற்ற வைத்துள்ளார். இதனால் தீக்காயம் ஏற்பட்டு அவர் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்களான வினோத், ராம்ராஜ், கார்த்திக் ஆகியோர் இவரை காப்பாற்ற முயற்சிக்கும் பொழுது இவர்கள் மீதும் தீப்பற்றி காயம் அடைந்தனர்.

உடனடியாக உப்பிலியபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை முதலுதவி சிகிச்சைக்காக உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து 108 வாகன மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில் விசாரணை செய்து வருகிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision