திருச்சி மறுவாழ்வு முகாமில் யானை மரணம்

திருச்சி மறுவாழ்வு முகாமில் யானை மரணம்

திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம், வன உயிரின பூங்கா சரகம், யானைகள் மறுவாழ்வு முகாமில் கீரதி (65) என்ற யானை கடந்த 2 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை தூத்துக்குடி பகுதியில் உரிமம் இல்லாமலும், எவ்வித அனுமதி இல்லாமலும் வளர்ப்பு யானை விதிகளுக்கு புறம்பாக, நோய்வாய்ப்பட்டிருந்தது.

இந்நிலையில் யானை பராமரிக்காமல் தொடர்ந்து யானையை துன்புறுத்திக் கொண்டிருந்ததை தூத்துக்குடி மாவட்ட யானைகள் பராமரிப்பு கமிட்டியின் பரிந்துரையின் பெயரில் சென்னை தலைமை வன உயிரின காப்பாளர் ஆணையின் பேரில், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் வைத்து சிகிச்சை அளித்து பராமரிக்க மாவட்ட வன அலுவலருக்கு உத்தரவிட்டதன் பேரில் வன கால்நடை மருத்துவர்கள் குழு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்கள்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் திருச்சி அவர்களால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வன கால்நடை மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு பரிந்துரையின் அடிப்படையில் யானைகள் மறுவாழ்வு முகாம் கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இச்செய்தி குறித்து திருச்சி மாவட்ட வன அலுவலர் , உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும், யானையை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்கள். திருச்சி மாவட்ட வன அலுவலர் தலைமையில், வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் திருச்சி மண்டல நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் தலைமையிலான குழு, மற்றும் பணியாளர்கள், தன்னார்வலர்கள், முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து யானைமுகாம வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision