தேவர் ஜெயந்தி  விழா - 20 பேர் மீது வழக்கு பதிவு

தேவர் ஜெயந்தி  விழா - 20 பேர் மீது வழக்கு பதிவு

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து அருகே உள்ள அவரது முழு உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர், சங்கங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமானவர் ஒரே நேரத்தில் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் மத்திய பேருந்து நிலையம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தலைமை தபால் நிலையம் பகுதியில் இளைஞர்கள் பலர் ஆரவாரத்துடன் மோட்டார் சைக்கிளில் மூன்றுக்கும் மேற்பட்டோர் தலைகவசம் அணியாமல் வந்து அதிக சப்தத்துடன் வீலிங் செய்து சாகசம் செய்தனர். சிலர் காரின் மீது ஏறி வந்தனர். சில இளைஞர்கள் தனியார் பேருந்து மீது ஏறி ஆரவாரம் செய்தபடி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.

இதில் கண்டோன்மென்ட் போலீஸ் நிலையம் முதல் தலைமை தபால் நிலையம் வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பேருந்து மீது ஏறி நின்று அட்டகாசம் செய்த இளைஞர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகளின் ஆய்வு செய்து 20 இளைஞர்கள் மீது கண்டோண்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO