திருச்சி ஸ்ரீ விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில்( மார்ச் 15-ல்) வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி ஸ்ரீ விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில்( மார்ச் 15-ல்) வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி கூத்தூர் விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் 15ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

பாலிடெக்னிக் மாணவர்களுக்கான இந்த வேலைவாய்ப்பு முகாம் மோட்டார் வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னை மற்றும் செங்கல்பட்டு, ஒசூர்ஆகிய இடங்களில் அமைந்துள்ள அதன் பல்வேறு சார்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வரும் 15ஆம் தேதி காலை 9 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல், மெக்கானிக்கல்டூல் & டை, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாலிடெக்னிக் டிப்ளமோ பாடப்பிரிவுகளில் மூன்றாம் ஆண்டு பயிலும் 500 மாணவர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற உள்ளனர்.

இந்த முகாம் ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மோகன் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் விஜயன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO