முன்னாள் படைவீரர்களுக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

முன்னாள் படைவீரர்களுக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு

முன்னாள் படைவீரர்கள் டிப்ளமோ பயிற்சியாளர்  பணிக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்  விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
 பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்  நிறுவனத்தில் (Power Grid. Corporation of India)  டிப்ளமோ டிரைய்னி (Diploma trainee Electrical ) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

டிப்ளமோ எலக்ட்ரிக்கல்& எலக்ட்ரானிக்ஸ் படித்த விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் WWW. Powergrid.com  என்ற இணையதளம் வழியாக  ஜூன் 29க்குள் விண்ணப்பித்தும் அதன் விவரத்தை திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்கவும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 0431-2960579 எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW