சுதந்திர தின விழாவில் குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்திய எம்பவர் டிரஸ்ட்

சுதந்திர தின விழாவில் குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்திய எம்பவர் டிரஸ்ட்

75வது சுதந்திர தின விழா
எம்பவர் டிரஸ்ட் அமைப்பினர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பாலையூர் கிராமத்தில் கொண்டாடினர். டிரஸ்டின் நிர்வாக இயக்குனர் முனைவர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் குழந்தைகளுக்கு சேமித்தல் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக உண்டியலை பரிசாக வழங்கியுள்ளார்.

இவ்விழாவில் பாலையூர் கிராமத்தின் திமுக கிளைச் செயலாளர் அமுதன்,
இளைஞரணி தலைவர் மாரிமுத்து,
துணைத் தலைவர் பால்ராஜ், செயலாளர் அரவிந்தன், துணை செயலாளர் அருண்பாண்டியன் மற்றும் குழந்தைகளும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவினை  கொண்டாடினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn