மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் திருச்சி தேசிய கல்லூரி மாணவர்கள் வெற்றி

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் திருச்சி தேசிய கல்லூரி மாணவர்கள் வெற்றி

திருச்சி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. மண்டல அளவிலான முதல் போட்டியில் தேசிய கல்லூரி மற்றும் ஜே.ஜே பொறியியல் கல்லூரி கிரிக்கெட் அணியினர் இடையே நடைபெற்றது. திருச்சி மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டியின் முதல் போட்டியில் தேசிய கல்லூரியின் கிரிக்கெட் அணியினர் திருச்சி ஜே.ஜே பொறியியல் கல்லூரி மாணவர்களை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர்.

திருச்சி தேசியக் கல்லூரியில் கிரிக்கெட் அணியை சேர்ந்த நிரஞ்சன் இப்போட்டியில் 140 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். திருச்சி தேசியக் கல்லூரியில் 242 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜே.ஜே பொறியியல் கல்லூரி கிரிக்கெட் அணி 138 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn