தேர்தலுக்கு முன்னரே மற்ற வகுப்புகளுக்கு தேர்வு - திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

தேர்தலுக்கு முன்னரே மற்ற வகுப்புகளுக்கு தேர்வு - திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருது உள்ளிட்ட மாநில அளவிலான விருதுகள் வழங்கும் விழா திருச்சி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி விளக்க உரையாற்றினார். விழாவில் நூறு ஆசிரியர்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருதும், 76 ஆசிரியர்களுக்கு பேராசிரியர் பேராசிரியர் அன்பழகன் விருதும் வழங்கி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசிய போது..... தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு இதுவரை இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரம் கோடி ஒரு லட்சத்து 57 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற துறைகளை காட்டிலும் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகமான நிதியை ஒதுக்கி முதல்வர் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை இன்று வரை 3521 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழக பள்ளிக்கல்வித்துறை தான் முதல் இடத்தில் உள்ளது. பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, ஒரே நேரத்தில் 8500 ஆசிரியர்களை இணையதள வாயிலாக ஒன்றிணைத்து விரிவான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நான் அமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை 136 தொகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளி, ஆரம்பப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி என அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று அங்கு இருக்கக்கூடிய கட்டுமான வசதிகளை குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பணியாற்றும் விதம் குறித்து ஆய்வு நடத்திய உள்ளேன்.

எனவே தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய பள்ளிகளில் உள்ள கட்டுமான குறைகள் குறித்து அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அதை உடனடியாக சரி செய்து கொடுப்பது அரசின் கடமை. எனவே ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய பள்ளிகளில் உள்ள சுற்றுப்புற சூழல் மற்றும் கட்டுமானங்கள் குறித்த தகவல்களை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. அது பெருமையின் அடையாளம். எனவே அரசு பள்ளியில் கல்வி கற்று கொடுக்கக்கூடிய ஒவ்வொருவரும் ஒரு புதிய ப்ராடக்ட் என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். அவர்களை கண்காணிப்பது தலைமை ஆசிரியரின் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்..... பொதுத்தேர்வுகள் ஏற்கனவே அறிவித்த கால அட்டவணைப்படி நடத்தப்படும். மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகள் இணையாக தேர்தலுக்கு முன்னதாக நடத்தி முடிக்கப்படும் இடைநிலை ஆசிரியர் போராட்டம் தொடர்பாக என்னை பெற்றோர் சந்திக்க வந்துள்ளனர் பேசிக் கொண்டே இருக்கிறோம். பொது தேர்வுகளை மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுதலாம் என்ற மத்திய அரசின் அரசாணை தமிழ்நாடு அரசு பின்பற்றப் போவதில்லை என அமைச்சர் மகேஸ் செய்தியாளர்களிடம் உறுதிப்பட தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision