பிரபல ரவுடி கௌரிசங்கர் வெட்டி கொலைசெய்துவிட்டு மாலை போட்டு விட்டு சென்ற கும்பல்-கொலையாளிகளை பிடிக்க டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படை எஸ்பி தகவல்

பிரபல ரவுடி கௌரிசங்கர் வெட்டி கொலைசெய்துவிட்டு மாலை போட்டு விட்டு சென்ற கும்பல்-கொலையாளிகளை பிடிக்க டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படை எஸ்பி தகவல்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன் கௌரி சங்கர் (35) . இவர் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் ஆகிய காவல் நிலையங்களில் உள்ளன. பிரபல ரவுடி குணா சுந்தரபாண்டி இவர்களுடன் நெருங்கிய நண்பர் ஆவார். 

கௌரிசங்கர் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான தேங்காய் நார் உரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருந்தார் அப்போது மாலை ஆறு மணி அளவில் சமயபுரம் புதுத் தெருவைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் கௌரி சங்கரை தொடர்பு கொண்டு பிறந்தநாள் விழா ஆசிர்வாதம் வழங்க வேண்டும் என தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

பிறந்த நாள் விழாவை கார்த்தி, சித்தார்தன், 7 பேர் கொண்ட கும்பல் தேங்காய்நார் தொழிற்சாலைக்கு சென்று கௌரிசங்கருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு ஆசிர்வாதம் வாங்குவது போல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கௌரிசங்கர் ஐ சரமாரியாக வெட்டி கொலை செய்த பின்னர் வைத்திருந்த பூ மாலையை அவர் மீது போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்தில் கௌரி சங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை தொடர்பாக சமயபுரம் கார்த்தி , கிளியநல்லூர் சித்தார்த்தன், மகாளிகுடி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் உள்ளிட்டோரை பிடித்து மண்ணச்சநல்லூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் பிரபல ரவுடி குணா, சுந்தரபாண்டி அவர்களின் கூட்டாளி பிரவீன் நேற்று கொலை செய்யப்பட்டு இறந்த நாள் அதே நாளில் அவருடைய நண்பர் கௌரிசங்கரை கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் காவல் துனை கண்காணிப்பாளர் செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் ஆய்வாளர் ரமேஷ் நேரில் சென்று விசாரித்து வருகின்றனார்

இந்த கொலை தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. கொலை தொடர்பாக 7 பேரை சந்தேகத்திற்கிடமாக விசாரணை செய்து வருகிறோம் மேலும் கொலையாளிகளை பிடிப்பதற்காக ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் சோமரசம்பேட்டை, மண்ணச்சநல்லூர், சமயபுரம் ஆகிய மூன்று இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருவதாக கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO